ஐ.பி.எஸ். அதிகாரியை கரம் பிடிக்கிறார் பஞ்சாப் அமைச்சர்

சண்டிகர்: பஞ்சாப் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ், ஐபிஎஸ் அதிகாரி ஜோதி யாதவை இம்மாத இறுதியில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.பஞ்சாபில் அனந்த்பூர் சாகிப்பில உள்ள கம்பீர்புர் கிராமத்தை சேர்ந்த பெய்ன்ஸ் வழக்கறிஞராக இருந்தார். இவர் கடந்த 2017 தேர்தலில் சாஹ்னேவால் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். முன்னதாக அவர் ஆம் ஆத்மியின் இளைஞர் அணிக்கு தலைமை தாங்கினார்.

ஐபிஎஸ் அதிகாரி ஜோதி யாதவ் அரியானாவில் உள்ள குருகிராம் பகுதியை சேர்ந்தவர். 2019ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி.  இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இம்மாத இறுதியில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: