மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் கொளத்தூர் தார்காடு கிராமத்தில் உள்ளது செம்மலை ஏரி. இங்கு தனசேகரன் என்பவரின் தோட்டத்தில் குஞ்சப்பன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவர் 10 வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இந்த தோட்டம் சிவிலிகரடு வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இந்நிலையில் நேற்றிரவு தோட்டத்தில் புகுந்த மர்ம விலங்கு ஒன்று அங்கிருந்த வெள்ளாடுகளின் கழுத்தில் கடித்ததில் 10 ஆடுகளும் உயிரிழந்தன.
இதனை இன்று காலை பார்த்த குஞ்சப்பன் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.