ஹாவேரி: பாஜ சார்பில் நடைபெற்ற பழங்குடியின மக்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்ட மாநில தலைவர் நளின்குமார் கட்டீலிடம் , காஸ் சிலிண்டர் விலை ஏற்றத்தை கண்டித்து இளம்பெண் கேள்வி எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாஜவினர், அவருக்கு பதில் அளிக்க முடியாமல் திணறினர்.
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் பட்கி பகுதியில் பாஜ சார்பில் பழங்குடியினர் மக்கள் மாநாடு நேற்று நடந்தது. இதில், பாஜ மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் கலந்து கொண்டு, ஒன்றிய மற்றும் மாநில பாஜ அரசு செய்த நலத்திட்டங்களை பற்றி பேசி கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு இளம்பெண், அவரது பேச்சை நிறுத்தி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.