திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் கண்டிகை பகுதியில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு நேற்று காணொளி காட்சி மூலம் திறக்கப்பட்டது. இந்நிலையில் பாஜக அலுவலகம் அருகிலேயே சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி நேற்று முன்தினம் நள்ளரவில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணவாளநகர் போலீசார் மற்றும் திருவூர் தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் என்ஜினின் முன்பக்கம் முழுவதும் எரிந்து சேதமானது.