நியூயார்க்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் பேராசிரியைக்கு எதிராக இனபாகுபாடு காட்டப்பட்டதாக கல்லூரி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மசாசூசெட்சில் உள்ள வெல்லெஸ்லி வணிக பள்ளியில் கடந்த 2012ம் ஆண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான லட்சுமி பாலசந்திரா இணை பேராசிரியராக சேர்ந்ததார். இந்நிலையில் கல்லூரியில் தனக்கு எதிராக பாலின மற்றும் இனபாகுபாடு காட்டப்பட்டதாக அவர் பாஸ்டனில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 27ம் தேதி வழக்கு தொடர்ந்துள்ளார்.