மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் வண்ணங்கள் எப்போதும் உங்கள் வாழ்க்கையில் பொழியட்டும்: பிரதமர் மோடி ஹோலி பண்டிகை வாழ்த்து

டெல்லி: ஹோலி பண்டிகை இன்று கொண்டாடுவதை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வட மாநிலத்தில் உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஹோலி பண்டிகையாகும். இந்த பண்டிகை வடமாநிலங்களில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஹோலி வாழ்த்துகள். மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் வண்ணங்கள் எப்போதும் உங்கள் வாழ்க்கையில் பொழியட்டும். உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வண்ணமயமான ஹோலி வாழ்த்துக்கள். என தெரிவித்துள்ளார்.

Related Stories: