பாட்னா: ரயில்வேயில் வேலை வாங்கி தருவதற்காக, நிலத்தை குறைந்த விலைக்கு லஞ்சமாக பெற்று மோசடி செய்த வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலுவிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள். பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் ஒன்றிய ரயில்வே அமைச்சராக இருந்தபோது பீகாரை சேர்ந்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி அவர்களின் நிலத்தை குறைந்த விலைக்கு லஞ்சமாக பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக லாலுவின் மனைவி ரப்ரி தேவியிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.