திரிபுரா முதல்வராக மாணிக் சகா மீண்டும் தேர்வு

அகர்தலா: திரிபுரா முதல்வராக மாணிக் சகா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை அவர் பதவி ஏற்க உள்ளார். 60 உறுப்பினர்கள் கொண்ட திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மார்ச் 2ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் 32 இடங்களை பிடித்து பா.ஜ மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. ஆனால் முதல்வர் தேர்வில் இழுபறி ஏற்பட்டது. பெரும்பாலான பா.ஜ எம்எல்ஏக்கள் முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேப்பிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து தற்போதைய முதல்வராக உள்ள மாணிக் சகா மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக பா.ஜ எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நேற்று அகர்தலாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் புதிய முதல்வராக மீண்டும் மாணிக் சகா தேர்வு செய்யப்பட்டார். அவர் நாளை பதவி ஏற்க உள்ளார். இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளாா்.

Related Stories: