லண்டன்: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கூட உரையாற்றலாம்; ஆனால் இந்திய நாடாளுமன்றத்தில் பேசிவிட முடியாது என்று லண்டனில் ராகுல்காந்தி கூறினார்.இங்கிலாந்து சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். தொடர்ந்து வெளிநாடுவாழ் இந்தியர்கள் மத்தியில் அவர் பேசுகையில், ‘கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நீங்கள் உரையாற்றலாம்; ஆனால் இந்தியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேச முடியாது என்பது வெட்கக்கேடானது. இந்திய எல்லைக்குள் சீன ராணுவ ஊடுருவல் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி பேச அவையில் அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு நாள் தானும் அவரது 10 நண்பர்களும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த நபரை அடித்ததாகவும், அன்று அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் சாவர்க்கர் தனது புத்தகம் ஒன்றில் எழுதியுள்ளார். ஒரு மனிதனை கும்பலாக சேர்ந்து அடித்தால், அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றால் அதனை கோழைத்தனம் என்று தானே கூறமுடியும்.