நாமக்கல்: சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டில் முதல் மாட்டை பிடித்து அடங்கிய மாடுபிடி வீரருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்கக்காசு பரிசளித்து பாராட்டினார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே மாப்பிள்ளையான் தோட்டம் பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது வாடிவாசல் வழியாக 400 காளைகள் சீறிப்பாய்ந்தன. அவற்றை 300 காளையர்கள் தீரத்துடன் அடக்கினர். ஜல்லிக்கட்டு போட்டியை கேலரியில் அமர்ந்து ரசித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல் மாட்டை பிடித்து அடங்கிய மாடுபிடி வீரருக்கு தங்க காசை பரிசளித்து பாராட்டினார்.