ஆஸ்கர் விழா மேடையில் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு கிட்டும் பெருமை: விழா மேடையில் அரங்கேற்ற உள்ள 'நாட்டு நாட்டு'பாடல்

டெல்லி: ஆஸ்கர் விருது வழங்கும் விழா மேடையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலை நேரடியாக அரங்கேற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ராஜமௌலியின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் சர்வதேச அளவில் கவனம் பெற்று பல்வேறு விருதுகளை குவித்து வருகிறது. மார்ச் 13ம் தேதி நடைபெற உள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிலும் அப்படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான போட்டியில் உள்ளது.

 இப்பாடல் நிச்சயம் ஆஸ்கர் வெல்லும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்த நிலையில் விழா மேடையில் பாடலை நேரடியாக அரங்கேற்றும் வாய்ப்பு பாடகர்களுக்கு கிடைத்துள்ளது. ராகுல் சிபிலிகஞ், கால பைரவா ஆகியோர் இணைந்து இப்பாடலை பாடவுள்ளனர். அண்மையில் கலிபோர்னியாவில் நடைபெற்ற ஹாலிவுட் கிரெட்டிக்ஸ் அசோசியேஷன் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் விருதுகளை குவித்தது. சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த ஆக்சன் திரைப்படம், சிறந்த சண்டை காட்சி ஆகிய விருதுகளுடன் நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த பாடலுக்கான விருதும் கிடைத்தது.

Related Stories: