வினோத் அதானியிடம் விசாரணை நடத்தப்படுமா?: காங்கேள்வி

புதுடெல்லி: அதானி குழுமத்தின் பண மோசடி குறித்து வினோத் அதானியிடம் விசாரணை அமைப்புக்கள் விசாரணை நடத்துமா என்ற  காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில், அதானி குழுமத்தில் வினோத் அதானியின் முக்கிய பங்கு பற்றி மேலும் மேலும் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளிவருகின்றன  அதானி குழுமத்தில் வினோத் அதானியின் ஷெல் நிறுவனங்களின் பணமோசடி குற்றச்சாட்டுக்கள் குறித்து ஒன்றிய விசாரணை ஏஜென்சிகள் விசாரணை நடத்துமா? பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைக்க வேண்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்

Related Stories: