மதுரை: எஸ்டிபிஐ கட்சியின் தலைவர்கள் சங்கமம் நிகழ்ச்சி, மதுரையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஜி தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் நெல்லை முபாரக் முன்னிலை வைத்தார். நிகழ்ச்சிக்குப் பின் தேசிய தலைவர் எம்.கே.பைஜி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மத்தியில் ஆளும் பாஜ அரசு, இந்திய நாட்டின் அரசியல் ஜனநாயகத்தை அழிக்கும் வேலையை செய்து வருகிறது. அதானி பிரச்னை பற்றி தற்போது வரை நாடாளுமன்றத்தில் வாய்திறக்காத நபராக பிரதமர் மோடி இருக்கிறார்.