புதுடெல்லி: அமெரிக்காவின் அணுசக்தி மையங்களை கண்காணிக்கும் விதமாக வானில் பறந்த சீனாவின் உளவு பலூனை அமெரிக்க ராணுவ போர் விமானம் சமீபத்தில் சுட்டு வீழ்த்தியது. இதுபோன்று பலூன் மூலம் சீனா பல நாடுகளை உளவு பார்ப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி இருந்தது. இந்நிலையில், இந்திய வான் பகுதியில் கடந்த ஆண்டே மர்ம பலூன் பறந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அந்தமான் நிகோபர் தீவுக்கூட்டங்களின் வான் பரப்பில் இத்தகைய பலூன் கடந்த ஆண்டு தென் பட்டுள்ளது.