ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நாதக வேட்பாளர் மேனகாவுக்கு ஆதரவாக நேற்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகையில், நம் கட்சியின் பிரசாரத்திற்கு எவ்வளவு இடையூறு செய்தாலும் போலீசார் நமக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பதற்கு நன்றி. இடைத்தேர்தலில் மட்டுமல்ல எல்லா தேர்தலிலும் நமக்குதான் மக்கள் வாக்களிப்பார்கள். அதிமுக வேட்பாளர் தென்னரசை சட்டசபைக்கு அனுப்பினால் அங்கு பாய், தலையணையுடன் சென்று தூங்கிவிடுவார். இப்படிப்பட்ட ஆட்களை தேர்வு செய்யாதீர்கள். தென்னரசை ஆட்டத்தில் இருந்து விலக்குங்கள் என்றார்.