டெல்லி: அதானி குழும நிறுவனங்கள் குறித்து செய்தி வெளியிட ஊடங்கங்களுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பல முறைகேடுகளில் அதானி குழும நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக அதானி குழும நிறுனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.