கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கல்லூரி மாணவிக்கு ‘லவ் டார்ச்சர்’ கொடுத்ததை தட்டிக்கேட்ட மாணவனை, சக மாணவன் பிளேடால் கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில், பி.எஸ்சி., 3ம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவரின் உறவுக்கார பெண், இதே கல்லூரியில் பி.ஏ., முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த மாணவிக்கு அதே கல்லூரியில் பி.ஏ., 3ம் ஆண்டு படிக்கும் மற்றொரு மாணவர் ‘லவ் டார்ச்சர்’ கொடுத்துள்ளார். இது குறித்து அந்த மாணவி, தனது வீட்டில் கூறியுள்ளார். இதனால், இருதரப்பிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னை தொடர்பாக இரு மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.