ராமேஸ்வரம்: தூத்துக்குடியில் இருந்து பாம்பன் கடல் பகுதிக்கு வந்த சரக்கு கப்பல் பாம்பன் ரயில்வே தூக்கு பாலத்தை கடந்து கொல்கத்தா துறைமுகம் நோக்கி சென்றது. தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் இருந்து புறப்பட்ட சரக்கு கப்பல் ஒன்று மன்னார் வளைகுடா கடல் வழியாக பாம்பன் கடல் பகுதிக்கு வந்தது. ேமற்கு வங்க மாநிலம் ெகால்கத்தாவில் உள்ள துறைமுகம் செல்வதற்காக வந்த சரக்கு கப்பலுக்காக நேற்று மாலை 4 மணியளவில் பாம்பன் ரயில் பாலத்தின் ஷெர்ஜர் தூக்கு பாலம் திறக்கப்பட்டது. பின் அந்த சரக்கு கப்பல் ரயில் பாலத்தை கடந்து பாக் ஜலசந்தி வழியாக கொல்கத்தா துறைமுகம் நோக்கி சென்றது.