ஐதராபாத்: ஐதராபாத்தில் இருந்து ெசன்னை புறப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து, அந்த விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று சென்னை புறப்பட தயாரான விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக, ஐதராபாத் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. வெடிகுண்டு மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து, அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் விமான நிலைய பாதுகாப்புப் படையினர் வெளியேற்றினர்.