பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்துக்கு பின்புறம் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெரிய குளம் உள்ளது. இது கன்னிகைப்பேர் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்தது. தற்போது இந்த குளத்தை சீரமைக்காததால் செடி, கொடிகள் மற்றும் நாணல் புற்கள் வளர்ந்து ஆக்கிரமித்துவிட்டது. மேலும் ஏரிக்கு தண்ணீர் கொண்டுவரும் கால்வாய்கள் தூர்ந்துவிட்டதால் தண்ணீர்வருவது தடைப்பட்டு குளம் வறண்டு காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந் வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலப்பதால் தண்ணீர் மாசுபட்டு அசுத்தமாகிவிட்டது.