புதுடெல்லி: டெல்லியில் மதுபானக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து, துணை முதல்வரும், நிதி அமைச்சருமான மணீஷ் சிசோடியா வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தியது. ஆனால், சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சிசோடியா பெயர் இடம் பெறவில்லை.