நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியா மக்களுக்கு சன்னி லியோன் உதவி

மும்பை: துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நாடுகளும் உதவிடும் நிலையில், பாலிவுட் ஜோடி சன்னி லியோன் மற்றும் டேனியல் வெபர் ஆகியோரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சன்னி லியோன் வெளியிட்ட பதிவில், ‘துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைக்காக எங்களது ஒப்பனை பிராண்டின் பிப்ரவரி மாத வருவாயில் 10 சதவீதத்தை வழங்க முடிவு செய்துள்ளோம். இக்கட்டான இந்த நேரத்தில், ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது அவசியம். அதன்மூலம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு உதவ முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: