புதுடெல்லி: டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கடந்த 2021-22ம் ஆண்டு புதிய கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியது. இதில் முறைகேடு இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கவர்னரின் பரிந்துரையின் பேரில், சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் கலால் துறையை தன்வசம் வைத்துள்ள துணை முதல்வர் சிசோடியாவிடம் கடந்த ஆண்டு அக்டோபர் 17ம் தேதி வரவழைத்து விசாரணை நடத்தியது.