திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சுமார் 30 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் 54 ஆயிரத்து 469 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இவர்களில் 25 ஆயிரத்து 484 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.