சென்னை: ஏடிபி சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, இந்தியாவின் சுமித் நாகல் தகுதி பெற்றார். காலிறுதியில் இங்கிலாந்தின் ஜே கிளார்க்குடன் (24 வயது, 313வது ரேங்க்) நேற்று மோதிய நாகல் (25 வயது, 506வது ரேங்க்) 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி, 1 மணி 22 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. தகுதிச் சுற்றின் மூலம் முதன்மை சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்ற சுமித், இப்போது அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். ஒற்றையர் பிரிவில் மற்ற இந்திய வீரர்கள் முதல் சுற்றுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.