வாஷிங்டன்: ``பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கையில் எவ்வித மாற்றமும் இல்லாததால், அவற்றின் மீதான தடை வாபஸ் பெறப்படாது,’’ என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் தலிபான் அமைப்பை அமெரிக்கா கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தீவிரவாத அமைப்பாக அறிவித்தது. அத்துடன் அதன் தலைவர்கள் ஹகிமுல்லா மெஷூத் மற்றும் வாலி உர்-ரஹ்மானையும் தீவிரவாத தலைவர்களாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை அமெரிக்கா, கனடா, இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தடை செய்து அறிவித்தன.