மளிகை கடையில் கொள்ளை: மர்ம நபருக்கு வலை

அண்ணாநகர்: அமைந்தகரை சத்தியம் குடியிருப்பு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கர்(54). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இந்த கடையின்  பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் கல்லாப்பெட்டியில் இருந்து ரூ.5000 மற்றும் 20 சிகரெட் பாக்கெட்டுகளை கொள்ளையடித்து கொண்டு பைக்கில் ஏறி தப்பி சென்றார். இந்நிலையில், அண்ணா நகர் ஆர்ச் அருகே சென்றபோது, அமைந்தகரை போலீசார் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். இதை கண்ட மர்ம நபர், அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். போலீசார் அவரை விரட்டி சென்று பிடிக்க முயற்சித்தனர். அதற்குள் அவர் பைக்கை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினார். இதையடுத்து, பைக்கில் இருந்த ரூ.1000 மற்றும் 20 சிகரெட் பாக்கெட்டுகளை  போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து, பைக்கின் பதிவு எண்ணை வைத்து, கொள்ளையடித்து சென்ற  மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related Stories: