புதுடெல்லி: லிவ்-இன் உறவு பார்ட் னர்களால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் கூறினார். டெல்லியின் காஷ்மீர் கேட் பகுதியில் சாஹில் கெஹ்லாட் என்பவர், தனது லிவ்-இன் காதலியை கழுத்தை நெரித்துக் கொன்று, அவரது உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்த கொடூரமான சம்பவம் நடந்தது. அதற்கு முன்னதாக மும்பையை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அவரது லிவ்-இன் காதலனால் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவமும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.