பெங்களூரு: கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் மின்வேலியில் சிக்கி உயிருக்கு போராடிய யானையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் சுற்றி திரிகின்றன. இந்நிலையில் ஒம்கர் வனசரகத்திற்கு உட்பட்ட தாஹி பகுதியில் இருந்து வெளியேறிய யானை, அங்குள்ள தனியார் தோட்டத்தில் நுழைந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மின்வேலியில் சிக்கியதில் மயங்கி விழுந்தது. அதனை பார்த்த நில உரிமையாளர், மின்சாரத்தை துண்டித்ததுடன் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.