காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா நேற்று தொடங்கியது. திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி விழா நடத்தப்பட்டு வருகிறது. 18வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நேற்று மாலை தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இவ்விழாவை காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
