கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி மாயமான 4 மாணவிகள் சடலமாக மீட்பு

கரூர்: கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி மாயமான 4 மாணவிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள அரசு பள்ளியை சேர்ந்த 15 மாணவிகள் இன்று நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் கலந்துகொள்ள திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு தங்களது பயிற்சியாளருடன் வந்துள்ளனர்.

அவர்கள் கால்பந்து போட்டி முடிந்தவுடன் மாயனூர் காவிரி கதவணை அருகே சுற்றிப்பார்க்க வந்துள்ளனர். அப்போது சில மாணவிகள் ஆற்றில் இறங்கியுள்ளனர். அவர்களை காப்பாற்ற உடன் வந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் முயன்றுள்ளனர். அப்போது தமிழரசி, சோபிகா, இனியா, லாவண்யா, ஆகிய 4 மாணவிகள் மாயமாகினர்.

பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மாயனூர் போலீசார், உள்ளூர் மீனவர்கள் ஆற்றில் இறங்கி மாணவிகளை தேடிவந்தனர். தொடர் தேடுதலில் 4 மாணவிகளின் உடல்களை சடலமாக மீட்டனர்.

Related Stories: