ஸ்ரீநகர்: காஷ்மீரில் குப்வாரா மாவட்டம் கெரன் பகுதியில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அவருக்கு பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டதால் கிரால்போரா மாவட்ட துணை மருத்துவனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் பனிப்பொழிவு காரணமாக சாலை வழியாகவோ, ஹெலிகாப்டர் மூலமோ அழைத்து செல்ல முடியவில்லை. இதனால் செய்வதறியாது திகைத்த ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், இதுகுறித்து கிரால்போரா மகப்பேறு டாக்டர் பர்வைசுக்கு தகவல் தெரிவித்தனர்.