குமரி: காதலர் தினத்தையொட்டி தோவாளை மலர் சந்தையில் ரோஜா பூக்கள் விலை 4 மடங்கு அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனால் பூக்கள் தேவை அதிகரித்துள்ளதால் அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. ஸ்டெம் ரோஜா கட்டு ஒன்றின் விலை 150 ரூபாயாக இருந்த நிலையில், 550 ரூபாயாக உள்ளது. சில்லறையில் ஒரு பூவின் விலை 10 ரூபாயாக இருந்த நிலையில், 35 ரூபாயாக உயர்ந்துள்ளது.
