அண்ணாமலை பிரசாரம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: கனிமொழி எம்.பி. உறுதி

திருச்செந்தூரில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலையின் பிரசாரம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு எதிரான செயல்களை தொடர்ந்து செய்து வருகிறது. அதனால் அவர்கள் யார் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெளிவாகத் தெரியும். இதனால் பாஜ ஆதரவு தெரிவிக்கும் யாருக்கும் மக்கள் ஓட்டுப்போட தயாராக இல்லை. தமிழ்நாட்டிற்கும், அதன் உரிமைகளுக்கும், தமிழ் மக்களுக்காகவும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும்  திமுகவின் ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நிச்சயம் அமோக வெற்றி பெறுவார். தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர்களிடையே  ஏற்படும் பிரச்னை குறித்து  இருநாட்டு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்பட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இதை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் சமீபத்தில் கூட பேசியுள்ளேன்’’ என்றார்.

Related Stories: