எதிர்கட்சிகளின் கோஷங்களுக்கு சிங்கம் போல் கர்ஜிக்கும் மோடி: பாலிவுட் நடிகை கங்கனா கருத்து

டெல்லி: எதிர்கட்சிகளின் கோஷங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் மோடி சிங்கம் போல் கர்ஜித்ததாக நடிகை கங்கனா கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரை மீதான விவாதத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் மக்களவையிலும், நேற்று மாநிலங்களவையிலும் பிரதமர் மோடி உரையாற்றினார். அதானி விவகாரம் ெதாடர்பாக எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து கோஷமிட்டு வந்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் பிரதமர் மோடி கடுமையாக தாக்கி பேசினார். எதிர்க்கட்சிகளை குறிவைத்து பேசிய பிரதமர் மோடி, அவர்கள் வீசும் சேற்றிலும் (குற்றச்சாட்டுகள்) தாமரை மலரும் என்று கூறினார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி குறித்து நடிகை கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‘அவர் (மோடி) சிங்கம் போல் கர்ஜித்தாலும், சூரியனைப் போல் பிரகாசித்தாலும், இடியாக முழங்கினாலும், மின்னலைப் போல பலமாக தாக்கினாலும், அவர் தனது எல்லையை மீறுவதில்லை. ஆனால் எதிர்க்கட்சிகளின் நடத்தை வெட்கக்கேடானது; அநாகரீகமானது’ எனக்கூறி, அவையில் பிரதமர் மோடி பேசிய வீடியோ பதிவை இணைத்துள்ளார்.

Related Stories: