நான்டெட்: விவசாயிகள் நாட்டை ஆட்சி செய்யும் நேரம் வந்து விட்டது என பாரதிய ராஷ்ட்ரிய சமிதி தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தேசிய அரசியலில் கால் பதிக்கும் நோக்கத்துடன், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்ற தன் கட்சியின் பெயரை அண்மையில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி என்று கே.சந்திரசேகர ராவ் மாற்றினார். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் பகுதியில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் முதல் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.