புனே: மாஜி இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது அவரது மனைவி பரபரப்பு புகார் அளித்துள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. இவர் மகாராஷ்டிராவின் பந்த்ரா (மேற்கு) பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், காம்ப்ளி மீது அவரது மனைவி ஆண்ட்ரியா போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், காம்ப்ளி நன்றாக குடித்து விட்டு, போதையில் குடியிருப்புக்கு வந்து என்னை தகாத வார்த்தைகளால் திட்டி வருகிறார்.