புதுச்சேரியில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்: புதுச்சேரி அரசு உத்தரவு..!!

புதுச்சேரி: தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதார் எண்ணோ அல்லது அரசு துறைகளால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அவனத்தையோ மின் இணைப்போடு இணைக்கவேண்டும் என்று புதுச்சேரி மாநில அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் மின் இணைப்போடு ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்கிற உத்தரவை கட்டாயமாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழ்நாட்டில் மின் இணைப்போடு ஆதார் என் கட்டாயமாக்கப்படவேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. அதே போலவே தற்போது புதுச்சேரியிலும் மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. ஆதார் எண் இணைக்க வேண்டும் அல்லது அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணம் ஆதார் எண்ணிற்கு பதிலாக மின் இணைப்போடு இணைக்க படலாம் என்கிற ஒரு வழிமுறையையும் புதுச்சேரி அரசு விதித்திருக்கிறது. மின் இணைப்பின் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக அந்த வழிமுறைகளில் மற்றம் ஏற்படுத்துவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. 

Related Stories: