திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரில் இன்று காலை ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் கர்ப்பிணி மனைவியுடன் அவரது கணவரும் தீயில் கருகி பலியானார். கேரள மாநிலம் கண்ணூர் அருகே மையில் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (32). அவரது மனைவி ரீஷா (26). இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்தநிலையில் ரீஷா மீண்டும் கர்ப்பமானார். அதன்படி இன்று கண்ணூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக பிரஜித் காரில் அழைத்து சென்றார். அவர்களுடன் மூத்த குழந்தை உள்பட மேலும் 4 பேர் காரில் இருந்தனர். காரை பிரஜித் ஓட்டிச் சென்றார். அவருக்கு அருகே முன் இருக்கையில் ரீஷா அமர்ந்து இருந்தார். கண்ணூர் அரசு மருத்துவமனை அருகே சிட்டி என்ற இடத்தில் கார் சென்று கொண்டு இருருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக காரின் முன்புறம் தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் தீ மளமளவென எரியத் தொடங்கியது. இதனால்
அதிர்ச்சி அடைந்த பிரஜித் காரை உடனே நிறுத்தினார்.