மாநிலங்களவை உறுப்பினர்கள் 3 பேர் பதவி ஏற்பு

புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பேர் நேற்று பதவி ஏற்று கொண்டனர். சட்டீஸ்கரில் இருந்து தேவேந்திர பிரதாப் சிங், உத்தரபிரதேசத்தில் இருந்து தேஜ்வீர் சிங் மற்றும் உத்தரகாண்டில் இருந்து மகேந்திர பட் ஆகியோர் மாநிலங்களவைக்கு பாஜ சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இவர்கள் 3 பேருக்கும் குடியரசு துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் நேற்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

The post மாநிலங்களவை உறுப்பினர்கள் 3 பேர் பதவி ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: