மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் அமைப்பினர் நடத்திய வாக்கெடுப்பில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சீக்கியர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் இந்து கோயில்கள் மீதான காலிஸ்தான் அமைப்பின் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும்படி இந்தியா தரப்பில் ஏற்கனவே ஆஸ்திரேலிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் பெடரேஷன் சதுக்கத்தில் சுதந்திரமான பஞ்சாப் கோரும் காலிஸ்தான் அமைப்பினரின் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.