வெலிங்டன்: நியூசிலாந்தில் கனமழை பெய்து வருகிறது. அங்கு ஆக்லாந்து ஏர்போர்ட்டில் வெள்ளம் புகுந்ததால் விமான பயணிகள் நீச்சலடித்து தப்பினர். நியூசிலாந்து நாட்டில் பேய் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஆக்லாந்து நகரில் நேற்று 3 மணி நேரத்தில் 15 செ.மீ மழை கொட்டியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. உடனடியாக ஆக்லாந்து ஏர்போர்ட் மூடப்பட்டது. அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டன. விமானத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் சிக்கிக்கொண்டனர். அவர்களில் பலர் நீச்சலடித்து தப்பினர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. கார் மற்றும் தாழ்வான இடங்களில் சிக்கிய 126 பேர் மீட்கப்பட்டனர். இந்த வெள்ளத்தில் இதுவரை 3 பேர் பலியாகி விட்டனர்.