வாஷிங்டன்: முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஐபிஎம் 3900 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. உலகமெங்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே மைக்ரோசாஃப்ட், அமேசான், கூகுள், சாஃப்டிபை, மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர் இந்தியாவை சேர்ந்த மென்பொருள் வல்லுநர்கள்.