திருவனந்தபுரம்: கேரள மாநிலம், ஆலப்புழா அருகே அம்பலப்புழா பகுதியை சேர்ந்தவர் முகம்மது நிசாம்(47). இவர் அப்பகுதியில் பெயிண்ட் கடை வைத்துள்ளார். இவரது கடையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இவர் 16 வயது முதல் நிசாமின் கடையில் வேலை பார்த்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் நிசாம் பண ஆசை காட்டி அவரை பலமுறை தன்னுடைய ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். நாளுக்கு நாள் இவரது தொல்லை அதிகமானதை தொடர்ந்து அந்த சிறுமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார்.
பின்னர் அந்த சிறுமியின் வீட்டுக்கு சென்ற நிசாம், இனி தொந்தரவு செய்ய மாட்டேன் என்று கூறி கட்டாயப்படுத்தி மீண்டும் வேலைக்கு வர வைத்துள்ளார். ஆனால் மீண்டும் அவரை மிரட்டி நிசாம் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் 21 வயதான அந்த இளம்பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க வீட்டினர் தீர்மானித்தனர். தனக்குத் தெரிந்த ஒரு வாலிபர் இருப்பதாக கூறி அந்த நபருக்கு நிசாமின் ஏற்பாட்டின் பேரில் இளம்பெண்ணுடன் திருமணம் நடத்தப்பட்டது. கடந்த மாதம் டிசம்பர் 18ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அந்த இளம்பெண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.