விமான பணிப்பெண்ணிடம் வம்பு: டெல்லியில் 2 பயணிகள் கைது

ஐதராபாத்: டெல்லியில் இருந்து ஐதராபாத் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பணியாற்றும் விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட பயணி அப்சர் ஆலம் என்பவரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘டெல்லியில் இருந்து ஐதராபாத் நோக்கிச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணி அப்சர் ஆலம் என்பவரும், அவருடன் வந்த மற்றொரு பயணியும் டெல்லியில் விமானத்தில் ஏறும் போது விமான பணிப்பெண்ணிடம் மோசமாகவும், ஆபாசமாகவும் நடந்து கொண்டனர்.

இதையடுத்து அவர்கள் இருவரும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். ெதாடர்ந்து பாதிக்கப்பட்ட விமான பணிப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

Related Stories: