கவுகாத்தி: நேற்று முன்தினம் `ஷாருக்கான் யார்?’ என கேட்ட அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா, `நேற்று அதிகாலை 2 மணிக்கு எஸ்ஆர்கே. போனில் தொடர்பு கொண்டு பேசினார்,’ என்று கூறியிருந்தார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்தனர். இந்நிலையில், செய்தியாளர்களை நேற்று சந்தித்த அவர் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறிய போது, ``அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ஜிஜேந்திரா படங்களை பார்த்துள்ளேன். இப்போது வரை ஷாருக்கானை பற்றி அதிகம் தெரியாது. கடந்த 2001ம் ஆண்டு முதல் இதுவரை அதிகபட்சமாக 7 படங்கள் மட்டுமே பார்த்துள்ளேன்,’’ என்று கூறினார்.