புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதியின் உரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்தப்படுமா என்பது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தி கூட்டத் தொடரை தொடங்கி வைப்பது மரபு. அதன்படி, இந்த ஆண்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்தப் போவதாக செய்திகள் வெளியாகின. தற்போதைய நாடாளுமன்றத்தின் அருகிலேயே புதிய நாடாளுமன்ற கட்டிடம் ரூ.1200 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.