லஷ்கர் கமாண்டர் உட்பட 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

நகர்: ஜம்மு காஷ்மீரின் குல்காம் ரெட்வானி கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். இரவு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை வீட்டில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

இதனை தொடர்ந்து தீவிரவாதிகளை சரணடைந்துவிடும்படி வீரர்கள் எச்சரித்தனர். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர்கள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதனை தொடர்ந்து வீரர்கள் நடத்திய பதிலடியில் தலைக்கு ரூ.10லட்சம் அறிவிக்கப்பட்ட தீவிரவாதி உட்பட இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

The post லஷ்கர் கமாண்டர் உட்பட 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: