குடியரசு தினவிழாவையொட்டி திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தூய்மை பணிகள் மும்முரம்

திருவாரூர்: குடியரசு தின விழாவையொட்டி திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் தூய்மை பணிகள் நடைபெற்றன.

நாட்டின் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாவானது அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மாவட்ட கலெக்டர்கள் மரியாதை செலுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் வரும் 26ம் தேதி குடியரசு தின விழாவானது நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.

இதனையொட்டி திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட விளையாட்டு அலுவலக மைதானத்தில் இந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியானது நடைபெற உள்ள நிலையில் இதில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.  இதையொட்டி விளையாட்டு மைதானத்தை தூய்மைப்படுத்தும் பணியிலும், விழா மேடை மற்றும் பார்வையாளர்கள் அமரும் இடம் போன்றவற்றில் வர்ணம் தீட்டும் பணியிலும் நேற்று ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Related Stories: