பிரான்ஸ்: பிரான்ஸில் அதிபர் இமானுவேல் மேக்ரான் அரசு திட்டமிட்டுள்ள ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக வெடித்த போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. பிரான்சில் தற்போது அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது 62-ஆக உள்ளது. இதனை 64-ஆக உயர்த்த கடந்த சில ஆண்டுகளாகவே அதிபர் இமானுவேல் மேக்ரான் முயற்சித்து வருகிறார். இந்த மாத தொடக்கத்தில் பிரதமர் எலிசபெத் போர்ன் பரிந்துரைத்த திட்டங்களின் படி 2027-ம் ஆண்டு ஒருவர் தனக்குரிய முழுமையான ஓய்வூதியம் பெறுவதற்கு 43 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கண்டித்து பிரான்ஸ் முழுவதும் நேற்று நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.